பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/43

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

37

2தேவமறி தாகங்கொண்டு தேடிவந்தன்பாய்த் திரண்டு
பாவியுனக்காக வன்று பாடுபட்டுத் தேகம் நைந்த
பலிக்கம்பம் வெற்றிக்
கொடித்தம்பம்
பக்கம் சென்றாலும் பேரின்பம் (ப)
வகுந்து = வழி. புனை = ஆடை.

 

40
உயிர்த்தெழுதல்.
'தசரத ராஜ குமாரா' என்ற மெட்டு.
கதிரவன் நாளதிகாலே

மரி யாளே பரி வாலேவிரை வாளே

கல்லறை வெறுமையாக் கண்டனள் முனமே
கர்த்தனுயிர்த்தா ரென்று கழறுந் தேவினமே
மெல்லிய லழுதுபின் மீளுறு கணமே
மேசையன் வடிவொன்று கொண்டார்
அயல் நின்றார் மரி யென்றார் தமை விண்டார்

ஏசு மறைந்தவுடன் இன்புறு மரியாள்
ஏகினள் சீடரிடம் இமையதுந் தரியாள்
தேசுறு மகிழுரை தெரிப்பதற் குரியாள்
தேவ மகிமையறி சீடர்
மகிழ் கூட நடமாடத் துதி பாட

எம்மாவூருக்கிருவர் ஏகினர் சீடர்
இடைவழி மருவினர் ஏசுவுங்கூடத்
தம்மாலியன்றவரை தகவுரையாடத்
தமையறியாது வழிபோகும்
பெரு வேகம் கதிரேகும் இருளாகும்

கோமகனுரைகளைக் கோளாளர் தெரிந்தார்
கூறியபோதேயுளங் கொளுந்து விட்டெரிந்தார்.
சேமவிடியல் வரச் செல்லுமென்றிரந்தார்
தேசிகனு மிணங்கி யிருந்தார்
ஒரு விருந்தார்முற்று மருந்தார் உருக் கரந்தார்