48
56
'ஐயா பழனிமலை வேலா' என்ற மெட்டு.
சகானா ஏகம்.
வங்காரமானவேத வசனம் - அதன்
வாசகம் அறுசுவை யசனம்
சிங்கார பரமதரிசனம்- அதைச்
சிந்திப்பவருக்கில்லை விசனம்
தேவாமிர்தமே தெளிதேனே - அதன்
திவ்யமதுரம் நிகர் தானே
ஜீவாதரமெனுமோர் வானே அதிற்
சிறிதுமோர் குறைவில்லை மானே
(வ)
வாலிபன் வழிகளிற்சேமம் அதை
வாசிக்க பகல் நடுச்சாமம்
காலோர வளமர நேமம்- உன்றன்
கருமங்கள் நிறைவுறுந்தாமும்
(வ)
பேதைக்குப் பரம விவேகம் - பல
பிணிகளும் பெயர்ந்துடன் போகும்
பாதைக்குப் பகலொளியாகும்- இரு
பதமொரு தீபமே தெய்வீகம்
57
புதிய ஏற்பாட்டுப் பத்துக் கற்பனைகள்.
'மாங்காய்ப் பாலுண்டு' என்ற மெட்டு.
1கர்த்தரே தெய்வமாய்க் கருதித் தொழுவார்க்கே
வித்தையு மேதுக்கடி
(மடந்தாய்!)
(கர்த்தருக்குப் பயப்படுதலே ஞானத்தின் ஆரம்பம்.)
2ஆவியில் தேவனை ஆராதிப்பவர்க்கே
ஆலய மேதுக்கடி
(மடந்தாய்!)
(ஆவியில் தொழுகின்றவர்க்கு ஆண்டவர் எங்குமிருக்கிறார்)