பக்கம்:கிறிஸ்தவக் கீர்த்தனம் 1933.pdf/7

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
 

கிறிஸ்தவக் கீர்த்தனம்.

முதற் புத்தகம்


காப்பு
கலி விருத்தம்

பூவினிற் போகமே புந்திபொருந்திடும்
ஆவன மாந்தருக்கன்று வரைந்தன
பாவினை யின்றியும் பண்டி தருள்ளரால்
தேவனைப் பாடவுந் திருவருள்வேண்டுமே

கடவுட்பரவல்
அறுசீர்க்கழிநெடிலடியாசிரிய விருத்தம்.


பிதா

மன்னுயி ரொன்றுங் கெட்டு மாண்டுபோ காம லென்றும்
மன்னுயிரடைய வேக மகனை முன் னளித்துப் பாரில்
இன்னதா யன்பு கூர்ந்தா ரெனிற் றிருப் பரம தந்தை
என்னதென் றுரைப்பேன் ஈசன் எனக்கருள்செய்தவாறே
மன்னுயிர் =1. மனிதாத்துமா 2. நித்தியஜீவன்.

குமாரன்

பாவியைமீட்க வின்பப்பரத்தைவிட்டிறங்கிப் பாவம்
பூவிலோ ரேழையாகிப் பொறையொடு திரிந்துசற்றி
நாவினாலுரைக்க வொண்ணா நடுக்குறும் பாடுபட் டே
ஆவியுமளித்த ஏசுவடியிணை முடிமேற் கொள்வாம்.

பரிசுத்தாவி

எண்ணருமாதி நீர் மேலியங்கியே ஏசுதேவ
புண்ணியன் தலைமேலன்று புறவமாயிறங்கிச் சீடர்
கண்ணிய பெந்தேக் கோஸ்திற் கனற்பெருங்காற்றுவீசி
மண்ணியல் மொழிகள் பேச மருவுதூயாவி போற்றி.
புறவம்=புறா.