பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள் 11

தந்தது. அவள் துணிந்து அவனோடு வெளிப் பயணம் செய்தாள்.

  அவன் மனைவி இவளால் கண்ணகியாயினாள்; அவளுக்கு இவன் எந்தக் குறையையும் வைக்கவில்லை. இரண்டு பிள்ளைகள்; இரண்டு பெண்கள்; கூட்டிப் பார்த்தால் நான்கு. அவர்கள் போதும்; அந்த அம்மை யாருக்கு நிறைவைத் தந்தது. இவனால் கூட்டல் கணக்குப் போடத் தேவையில்லை; அவன் கழித்தல் கணக்கு அவர்களுக்கு ஒரு வகையில் நிம்மதியைத் தந்தது. அவர்கள் தாய்மையில் மனநிறைவு கண்டார்கள்.
  இந்த விவரம் எல்லாம் தேவையில்லை. என்றாலும் இப்படியும் சில சிவபார்வதிகள் சீலம் உள்ளது என்பதைக் கூற வேண்டியுள்ளது.
  இந்தச் சிவபார்வதிக்கு ஒரு மகள் காலாவதி ஆகிவிட்டாள். அவள் எப்படி இறந்தாள்? அது எல்லாம் பழைய கதை. பூர்வ ஆசிரமத்துக் கதை. டாக்டர் கேட்ட தொகை தர இயலாமையால் அவளை இவள் இழக்க நேர்ந்தது. பழையவன் ஒரு குமாஸ்தா; அவன் கற்ற பாடம் அது; அதனால் அவளுக்கு அவன் எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை; 'எங்கிருந்தாலும் வாழ்க' என்று வாழ்த்துக் கூறினான். பூரீதரின் படம் அவனுக்கு இவ்வகையில் உதவியது.
  இந்தக் கதைகள் எல்லாம் எதற்காக! இப்பொழுது இந்தப் பெண் இவளுக்கு ஒரே மகள்; அந்த அன்பர் ஒரே தந்தை. வளர்ப்புத் தந்தை என்ற புதிய பதவி அவனுக்குக் கிடைத்தது.
  அவன் அவள் வளர்ப்புக்கு எந்தப் பொறுப்பும் ஏற்க வில்லை. அவளேதான் வளர்ந்தாள். என்றாலும் அந்தத் தலைமை அவனுக்கு வாய்த்தது. அவள் மட்டும் அவனை 'அப்பா' என்று கூப்பிட்டது இல்லை;