பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/146

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

144 ராசியான பேர் வீட்டுக்கு வருகிறேன். “வெளியே போய்யா! அய்யா வீட்டில் இல்லை' என்று என் மனைவி சொல்கிறாள். 'அய்யா இருக்கிறார். பொய் சொல்றீங்க' என்று சொல்கிறேன். அவள் சிறிது நேரம் ஆயிற்று என்னை அடையாளம் ᏜfᎢ6ᏈᏈᎢ. 'அடியோடு மாறிவிட்டீர்களே' என்றாள். 'முடி யோடு தான் மாறிவிட்டேன்' என்றேன். தாடிபோன பிறகுகூட என்னை மற்றவர்கல் தாடி’ என்றே அழைத்தார்கள். இந்தப் பெயர் என்னை விட்டு நீங்காது என்பதை உணர்ந்து கொண்டேன்; ஒரு தடவை தவறு செய்துவிட்டால் அவள் அவிசாரி தான். பத்தினி என்று சொல்ல மாட்டார்கள் என்பதை உணர்ந்தேன். தாடியோடு இருந்தபோது ஒரு போட்டோ பிடித்து மாட்டி வைத்திருந்தேன். என் பக்கத்தில் என் சகதர்மினி உட்கார்ந்திருந்தாள். நான் நாற்காலியில் அமர்கிறேன். அவள் பக்கத்தில் நிற்கிறாள்; சிலபேர் பாரதியின் பழைய படம் என்று நினைக்க ஆரம்பித்தார்கள். சிலர் யார் இந்தப் பெரியவர் என்று விசாரிக்க ஆரம்பித்தார்கள். பெருமை என்பதே தாடியால்தான் வரு கிறது என்பதை உணர்கிறேன். மொட்டை அடித்துக் கொண்டபிறகு என்னைப் பார்த்தவர்கள் 'நீ வில்லனாக நடிக்கலாம்” என்றார்கள். தாடிக்கும் மொட்டைக்கும் உள்ள வித்தியாசத்தைக் காண முடிந்தது. நடிப்பதில் ஆசை பிறந்தது. நடிகர் அசோகன்தான் நினைவுக்கு வந்தார். வில்லனாக நடிப்பதற்கு அவர் மொட்டை அடித்துக் கொண்டது நினைவுக்கு வந்தது.