பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/160

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

158 நாரத முனிவரின் பூலோக யாத்திரை "ஒரே கிக்கா இருக்கிறதே' என்றாள். "கொஞ்சம் திக்காகப் போட்டுப் பாருங்கள்' அவள் கண்களில் நீர் நிறைந்தன. 'நீங்கள்தான் இசைக்கே மூலகர்த்தா என்று சொல் கிறார்களே” 'அப்படிச் சொன்ன காலம் உண்டு; இப்பொழுது கூட்டத்தைக் கலைக்கப் போலீஸ் தேவை இல்லை' 'கருநாடக சங்கீதம்' 'நாங்கள் இப்பொழுது பாப்மியூசிக்குக்கு வந்துவிட் டோம்; நீங்கள் இன்னும் கருநாடக சங்கீதத்தையே கேட்டுக் கொண்டு இருக்கிறீர்கள்' y 'நீர் தேவனாகப் பேசவில்லையே' நாங்கள் எல்லாம் மாறி விட்டோம்; மனிதனைப் போல வாழ்வது என்ற முடிவுக்கு வந்துவிட்டோம்' 'காரணம்' 6 ú சுக போதை எங்களைக் கெடுத்துவிட்டது. உழைப்பில் உள்ள சுகம் மனிதர்கள் அனுபவிக்கிறார்கள். அதை இழந்து விட்டோம்.' 'நாங்களும் மனிதர்களைப் போலக் குழந்தை களைப் பெற விரும்புகிறோம்; இது முதற்படி' 'அது எப்படி' ‘'தேவர்கள் குழந்தைகள் பெற்றதாக எந்தக் கதை யாவது கேள்விப்பட்டது உண்டா? ஆடல், பாடல், கூடல், கும்மாளம் சுருக்கமாகச் சொன்னால் குடி கூத்து இதுதான் கேள்விப்பட்டிருப்பீர்கள். நரை, திரை, வயது, மூப்பு இந்த மாற்றங்கள் இல்லாத வாழ்க்கை ஒரு வாழ்க்கையா? நாங்கள் மாறுதலை விரும்புகிறோம்.