பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கிளிஞ்சல்கள 79 'வீதியில் நிற்கிறார்கள்' என்று இவர் பதில் சொல் கிறார். பட்டம் பெறுவதற்கு அவர்கள் டொனேஷன் தந்திருக்கிறார்கள். அதனால் அவர்கள் இன்று சேம முற வேண்டித் தெருவுக்கு வந்திருக்கிறார்கள் என்று மேலும் இவர் விளக்கம் தந்தார்'. 'இவர் இப்படித்தான்; சொல்றதை நம்பி விடு வாருங்க” இது பின்னணிப் பாட்டு. அவர்கள் இளைஞர்கள்; வேலை கேட்டு இருக் கிறார்கள்; இல்லை. அது அவர்கள் நிலை; வெடிகுண்டு வைக்கத் திட்டம் போடவில்லை; கட்சிகளில் சேர்ந்து கொடி பிடிக்கவில்லை. நாகரிகமாகக் கேட்டுப் பெறுகிறார் கள். அந்தக் கண்ணியம் அவருக்கு மனநிறைவைத் தரு கிறது. மற்றவர்கள் என்ன நினைக்கிறார்கள்? ஏதாவது நினைக்கட்டும். இந்த நாட்டு நிலவரம் இது. た。 ミ