பக்கம்:கிளிஞ்சல்கள் (சிறுகதைகள்).pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

கிளிஞ்சல்கள் 7

கிளிஞ்சல்கள்
  அவளுக்கு மணம் ஆகவில்லை.
  அவளை அடுத்து இந்தக் கேள்விக் குறி எழுகிறது. வாக்கியத்தின் முடிவில் அமைவது இது. அவளோடு பேசுகிறவர்கள் இதைத் தவறாமல் பயன்படுத்துகின்றனர். எப்பொழுது என்பது அவளைப் பற்றிய வினா.
  வயதானவர்கள் அவர்களைப் பற்றி விசாரிக்கும் போது எழுவது "எப்படியிருக்கிறீர்கள்? உடம்புக்கு ஒன்றும் இல்லையே?" என்பது. இந்த வைத்தியர்களுக்கு அவர்கள் வழக்கமான பதில் சொல்ல வேண்டி நேருகிறது. சர்க்கரை இருநூற்று ஐம்பது; பி.பி. அதிகம் இல்லை; இவற்றை வைத்துத்தான் நாழிகைக் கணக்கு நிறுவப் படுகிறது. "பரவாயில்லை" இந்த ஆறுதல் அளிக்கப் படுகிறது. வேறு என்ன அவர்களைப் பற்றிக் கேட்க முடிகிறது.
  விசாரணை நல்லுறவுகளுக்கு அவசியம் தேவைப் படுகிறது. "விசாரித்தானா" என்று அவர் சொல்லாமல் இருக்க வேண்டும்.
  இவளைச் சந்திக்கின்றவர்கள் கேட்கும் வழக்கமான கேள்வி : "எப்பொழுது கல்யாணம் செய்து கொள்ளப் போகிறாய்?" - அது அவள் முயற்சியில் இருப்பது போன்ற கேள்வி அது.