பக்கம்:கி. வா .ஜ. பேசுகிறார்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வாத்தியார் ஐயா 夏岛岛

'எப்படி இருக்கக் கூடாது?’ என்றும் கூறுகிறார்கள். அப்படிச் சொல்லும்பொழுதும் வாத்தியாரின் குணங்களை யும் தொழில்களையும் சொல்லிவிட்டு, உபமானங்கள் மூலமாகவும் பொல்லாத வாத்தியார்கள் இப்படி இருப்பார் கள் என்று தெரிவிக்கிறார்கள்.

நல்ல குணங்கள் இல்லாமல் இருந்தால் பிள்ளைகளுக்கு அவரிடத்தில் வேலை இல்லை; வெறும் படிப்பை மாத்திரம் கற்றுக்கொள்வது என்பது பழைய தமிழ் நாட்டில் இல்லை. நடை, உடை, பாவனை எல்லாவற்றிலும் நல்லவைகளைப் பிள்ளைகள் ஆசிரியரிடத்தில் கற்றுக்கொள்ளுவார்கள். தாம் கற்ற கல்வியை ரூபா, அணா, பைசாவாக மாற்றுவது அக்காலத்தவர் நோக்கமல்ல. கல்வியை வாழ்க்கையாக மாற்றுவார்கள். கற்றவற்றைச் சோதனை யிடுவதையே வாழ்க்கையாக எண்ணுவார்கள். வாழ்க்கை முழுவதும். பயன்படும் கல்வியைச் சிறந்த குணங்களைப் பெற்ற ஆசிரியர்களிடம் கற்க வேண்டுமே யொழியச் சாதாரண மனிதர்களிடம் கற்பதில் சிறப்பு ஒன்றும் இல்லை.

சிறந்த குணங்கள் இல்லாவிட்டாலும், குற்றமில்லை யென்று வாத்தியார் ஐயா ஒருவரிடம் குழந்தைகளை ஒப்பிக்கிறோம். 'லட்சிய வாழ்க்கைக்குரிய வழி ைய அவர் கற்றுத் தர வேண்டாம்; சாமான்ய வாழ்க்கைக்குப் போதியவற்றைக் கற்பித்தால் போதும்’ என்று எண்ணு கிறோம். அந்த வாத்தியார் கெட்ட குணம் உடையவராக இருந்தால் பையனுக்கு முதலில் அதுதானே படியும்? இளம் பருவத்தில் நல்லது ஏறாவிட்டாலும் கெட்ட பழக்கங்கள் மிக விரைவாக ஏறிவிடும். ஆகையால் வாத்தியார் ஐயா ஒரு மகாத்மாவாக இல்லாமற்போனாலும் குற்றம் இல்லை; போக்கிரியாக இருக்கக் கூடாது' என்று நாம் நினைக் கிறோம். அதையே இலக்கணக்காரர்களும் சொல்கிறார்கள். வாத்தியார் மற்றவர்களுடைய நலத்தைக் கண்டு