புருஷோத்தம யோகம் 223 அ பகவானுவாச : ஊர்த்த்வ-மூல-மத:சாக-மச்வத்தம் ப்ராஹ-ைரவ்யயம் ச்சந்தாம்லி யஸ்ய பர்னானி யஸ்தம் வேத ல வேதவித் 1. மீதுள வேரதுவாய்க் கீழ்வளர் சாகையதாய் வீடி யழிந்திலதா யாதரசைச் சொனதோ வேதமெதற் கிலைகளா மதையா ருனர்தல் மேயினன் மற்றையவன் வேத முனர்ந்தவனால், 552. பரீ பகவான் சொல்லுகிறான்: அவ்யக்தம் மேலே வேர்களும் கீழே கிளைகளுமுடையதோர் அரச மரத்தைப் போன்றது என்பர். அதன் இலைகளே வேதங்கள் அதை அறிவோனே வேதமறிவோன். (அவ்யக்தம் - ஜகத்தின் தெளிவுபடாத உள் நிலை). அதச்-சோர்த்த்வம் ப்ரஸ்ருதாஸ்-தஸ்ய சாகா குண-ப்ரவ்ருத்தா விஷய-ப்ரவாலா: அதச்ச மூலான்-யனுஸ்ந்ததானி கர்மானுபந்தீனி மனுஷ்யலோகே 2. அம்மரத் துள்ளன குணங்களினால் வளரும் ஐம்புல மாயதளிர் பம்பிய சாகைகள் கீ ழும்மிசையும் பரவுங் கீழும் மனித்தவுல குட்பல வாயவினைக் கட்டெனும் வேரடரும். 5.53 அதன் கிளைகள் குணங்களால் ஓங்கி விஷயத் தளிர்களுடன் கீழும் மேலும் பரந்து கிடக்கின்றன. அதன் வேர்கள் கீழ் நோக்கிப் பல்கி மனித உலகத்தில் கர்மத் தொடுப்புக்களாகின்றன. ந ரூப-மஸ்யேஹ ததோபலப்ப்யதே நாந்தோ ந சாதிர் ந. ச லம்ப்ரதிஷ்ட்டா 3. இந்த மரத்துருவை யந்தவிதம் மிவுலகில் லறிவந் ததிலை யிறு முனர்ந்ததிலை முந்திய வாதியையுஞ் சிந்தை தெரிந்ததிலை மொய்த்த விருப்பிடனு முய்த்தறி யப்படலில், 554 ஆதலால் இவ்வுலகத்தில் இதற்கு வடிவங் காணப்படுவதில்லை. முடிவும். ஆதியும். நிலைக்களனும் புலப்படுவதில்லை. நன்கு ஊன்றிய வேருடைய இந்த அரச மரத்தைப் பற்றின்மை யென்னும் வலிய வாளால் வெட்டியெறிந்து விட்டு.
பக்கம்:கீதைப்பாட்டு.pdf/224
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை