236 கீதைப் பாட்டு ஆலமரீம் யோனி-மாபன்னா மூடா ஜன்மனி ஜன்மனி மாமப்ராப்யைவ கெளந்தேய ததோ யாந்த்-யதமாங் கதிம் 20. குந்திக் கொருசுத வசுரப் பிறவிபு கும்மற்றவர் சன்ம சன்மத்தும் புந்தித் தெளிவிலர் முந்தைக் கிழிகதி புகுவா ரெற்பெறு கிற்காதே. 592 பிறப்புத்தோறும் அசுரக் கருக்களில் தோன்றும் இம்மூடர் என்னை யெய்தாமலே மிகவும் கீழான கதியைச் சேர்கிறார்கள். குந்தியின் மகனே! த்ரிவிதம் நரகஸ்யேதம் த்வாரம் நாசன-மாத்மன: காம: க்ரோதஸ்-ததா லோபஸ்-தஸ்மா-தேதத் த்ரயம் த்யஜேத் 21. சினமொடுறு காமமது பொரவு லோபம் திரிவித சுபாவமிவை யுயிரினுக்கு நனிகெடுதல் செய்யு நரகவழி யஃதால் நவிலுமிவை மூன்றும் மறவிடுதல் வேண்டும். 593 ஆத்ம நாசத்துக்கிடமான இம் மூன்று வாயில்களுடையது நரகம்: 'அவையாவன காமம், சினம், அவா. ஆதலால், இம்மூன்றையும் விடுக. ஏதைர்-விமுக்த: கெளந்தேய தமோத்வாரைஸ்-த்ரிபிர்-நர: ஆசரத்-யாத்மன: ச்ரேயஸ்-ததோ யாதி பராங் கதிம் 22. இருளினுக் குறுஉம் வாயிலாயுள இவைகள் மூன்றினால் விடுபடுந்தரன். ஒருதனக் குயர்ந்தது புரிந்தவன் உயர்கதிக்கதா லுறுவன் குந்திசேய், 594 இந்த மூன்று இருள் வாயில்களினின்றும் விடுபட்டோன் தனக்குத்தானே நலந் தேடிக் கொள்கிறான். அதனால் பரகதி அடைகிறான். ய: சாஸ்த்ரவிதி-முத்ஸ்ருஜ்ய வர்த்ததே காம காரத: ந ல லித்தி-மவாப்னோதி ந லகம் ந பராங் கதிம் 23. எவன் சாத்திர விதியினை விட்டொருதன திச்சைப்படி செய்திருப்பானோ அவனோர் சித்தியு மிடையா னின்பமும் அடையான் பரகதி யடையானே. 595 சாஸ்திர விதியை மீறி, விருப்பத்தால் தொழில் புரிவோன் சித்தி பெறான்; அவன் இன்ப மெய்தான் பரகதி அடையான்
பக்கம்:கீதைப்பாட்டு.pdf/237
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை