262 கீதைப் பாட்டு ஸ்வே ஸ்வே கர்மண்யபிரத: லம்லித்திம் லபதே நர: ஸ்வகர்மநிரத: லித்திம் யதா விந்ததி தச்-ச்ருனு 45. தன்றன் கருமத்தில் விழைந்து நரன் சஞ்சித்தியை யெய்துவன் றன்றன்வினை என்றும் புரிகிற் பவனெவ் விதஞ்சித் தியையெய்துவ னோவது கேள்வி கொள்வாய். 669 தனக்குத் தனக்கு உரிய கர்மத்தில் மகிழ்ச்சியுறும் மனிதன் ஈடேற்றம் பெறுகிறான். தனக்குரிய தொழிலில் இன்புறுவோன் எங்ங்னம் சித்தி யடைகிறானென்பது சொல்லுகிறேன். கேள். யதஃப்ரவ்ருத்திர்-ப்பூதானாம் யேன ஸர்வமிதந் ததம் ஸ்வகர்மணா தமப்ப்யர்ச்ய வலித்திம் விந்ததி மானவ: 46. எவனின் றுயிர்கட் குதயம் முளதோ எவனாலிவ் வனைத்து நிறைந்துளவோ அவனைத் தனதாய கன்மத்தி னருச் சனைசெய் தடைவன் னரன்சித் தியையே. 670 உயிர்களுக் கெல்லாம் பிறப்பிடமாய், இவ்வையக மனைத்திலும் நிறைந்திருக்கும் கடவுளைத் தனக்குரிய கர்மத்தால் பூஜை செய்யும் மனிதன் ஈடேறுகிறான். ச்ரேயான் ஸ்வதர்மோ விகுண: பரதர்மாத் ஸ்வனுஷட்டி தாத் ஸ்வபாவநியதங் கர்ம குர்வந் நாப்னோதி கில்பிஷம் 47. தற்கொடு செயத்தகு தன்மங்குன மிலேனுஞ் சாலவொழு குற்றவயல் ஞான தருமத்தின் முற்பட வுயர்ந்த தியல்பாய் மெய்விதி கன்மம் முயலுபவ னெய்தலிலை பவமதனை யம்மா 671 பிறர்க்குரிய தர்மத்தை நன்கு செய்வதைக் காட்டிலும் தனக்குரிய தர்மத்தை குணமின்றிச் செய்தலும் நன்று இயற்கையி லேற்பட்ட தொழிலைச் செய்வதனால், ஒருவன் பாவ மடைய மாட்டான். லஹஜங் கர்ம கெளந்தேய ஸ்தோஷ-மபி ந த்யஜேத் லர்வாரம்ப்பா ஹி தோஷேண தூமேனாக்னி-ரிவாவ்ருதா: 48. இயற்கையி னிகழ்த்தும் வினைகே டுடையதேனும் இகழ்ந்து விடற்கதிலை குந்திமக னேயோ, முயற்சியின் றொடக்க முழுமைக்கு மலவோதான் மூடுவது கேடுபுகை சூடெரியினம்மா. 5 Z 2 (ஈண்டுக் கேடு - துக்கம் சரீர சிரமம் முதலியன)
பக்கம்:கீதைப்பாட்டு.pdf/263
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை