பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெரியார் பெருந்தொண்டர் தி. வே. சுந்தரமூர்த்தி அதர்மத்தைக் காத்து அதை நிலை நாட்டி ஆதன் மூலம் தங்கள் மேலாதிக்கத்தை எக்காலத்திலும் தக்க வைத்துக் கொள்வது தான் பகவத் கீதையின் நோக்கம். வெல்லும் தூயதமிழ் சிறப்பாசிரியர் க. தமிழமல்லன் மானவுணர்வும் மறவுணர்ச்சியும் சிறிதும் குன்றாமல் சுவையாகவும் சூடாகவும் இந்நூலை ஆக்கியுள்ளார். அவரின் கருத்துக்களை ஏவராலும் மறுக்க இயலாவண்ணம் தம் ஆற்றலை நிலைநாட்டியுள்ளார். தினமலர் 9-2-94 மதிப்புரை கீதை கூறும் கருத்துக்களின் உள்நோக்கம் என்ன என்ற நோக்கில் ஆராய்ச்சி நூலாக வெளியிட்டுள்ளார் நூலாசிரியர். பகவத் கீதை முரண்பாடுள்ள கருத்துக்கள் கொண்டுள்ளதாக ஆசிரியர் பல மேற்கோள்கள் காட்டியுள்ளார்.