பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

148 ைேத காட்டும் பாதை அர்ச்சுனன், பங்காளிகளுக்கு எதிராக மட்டும் முடுக்கிவிடப்படவில்லை; பாட்டாளிகளுக்கு எதிராக வும் தூண்டி விடப்பட்டிருக்கிறான் என்பது புரி கிறது. - - பக்தியின் பெயரால், ஞானம் என்ற பெயரால், யோகம் என்ற பெயரால், தத்துவம் என்ற பெயரால், ஆன்மீகம் என்ற பெயரால், கீதை பன்னிப் பன்னித் திரும்பத் திரும்பக் கூறுவ தெல்லாம், நான்கு வருணப் பாகுபாடுதான்! உலகத்தில் எந்த நாட்டிலும் இல்லாத கொடுமை இந்த நாட்டிலே உருவாகியிருக்கிறது. இந்தக் கொடுமையான ஏற்பாட்டை நான் தான் செய்கிறேன் என்று கூறுபவன் இங்கு கடவுளாகக் கருதப்படுகிறான். - அதனால் தான் முன் காலத்தில் புத்தரும், பின் காலத்தில் தந்தை பெரியாரும், கடவுள், மதம், வேதம், உபநிடதம், புராணம், சாத்திரம், சம்பிரதாயம் அத்தனையும் ஒழிக்கப்பட வேண்டும் என்று அறிவுரை கூறினார்கள். போதி மரத்தடியில் ஞானம் பெற்ற புத்தர் இந்த நாட்டின் பெரும்பான்மையான மக்களின்