52 கீதை காட்டும் பாதை அவன் பெறும் பயனாகிறது. அந்தப் பயனும் இல் லாமல் அவன் போர் செய்வதில் பொருளே இல்லை. சாதாரணப் போர்வீரனின் வெற்றி தோல்வி அவனுடைய அரசனுக்குப் பயன் தருவதாக இருக்க லாம். அவனை உன் சொந்தப் பயனைக் கருதாதே; உன் கடமையைச் செய் என்று சொல்லி விடலாம். ஆனால், அர்ச்சுனன் ஒரு மன்னன். அவன் தன் நாட்டு வெற்றிக்காக - தான் அரசு பெறுதவற் காக - பாண்டவர்கள் மீண்டும் ஆளும் உரிமை பெறு வதற்காக - ஒரு பெரிய பயன் கருதிய போராட்டத் தில் தான் ஈடுபட்டிருக்கிறான். போரின் வெற்றி அவர்களுடைய பதின்மூன் றாண்டுக்குக் கனவுகளை - இலட்சியத்தை - குறிக் கோளை அடையும் பயன் உள்ளதாகும். - அவனைப் பார்த்து நீ பயனை எதிர்பாராதே. உன் தொழிலைப் - போர்த் தொழிலைச் செய் என்று சொல்வது பொருத்தமா யில்லை. வெற்றி தோல்விகளைப் பற்றிக் கவலைப்படா மல் போர் செய்வது என்பது - உற்சாகமற்ற - ஈடு பாடற்ற - வெறும் பொம்மை விளையாட்டாகத்தான் இருக்க முடியும். ஒரு வீரனுக்கு வெற்றி என்பது இலட்சியமாக இருக்க வேண்டும். தோல்வி ஏற்பட்டால் தாங்கிக் கொள்ள உறுதி வேண்டும். அல்லது வீரமரணம் அடைதல் வேண்டும்.
பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/58
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை