பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

5 நான்கு வருணங்கள் ஒரு பயங்கர ஏற்பாடு இதுவரை கிருஷ்ணன் தன்னைப் பரமாத்மா என்று குறிப்பிட்டுக் கொண்டு வந்தான். இப்போது வெளிப்படையாகவே தன்னைப் பெரிய பரம் பொருள் என்று சொல்லத் தொடங்கு கிறான். - இடை யிடையே தன்னைப் பற்றிக் கண்ணன் கூறிவந்ததை அர்ச்சுனன் கவனித்துக் கொள்ள வில்லையோ அல்லது அவன் மனத்தில் படிய வில்லையோ தெரியவில்லை. ஞான யோகத்தை விவஸ்வான் என்கிறவனுக் குத் தான் முதன் முதலில் சொன்னதாகக் கண்ணன் கூறினான். விவஸ்வான் முன் இருந்தவன். நீ இப்போது பிறந்தவன். அப்படி யிருக்க நீ எப்படி அவனுக்குச் சொல்லியிருக்க முடியும் என்று அர்ச்சுனன் கேட்கிறான்.