பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/8

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
6

சாதாரண மக்களுக்கு எளிதாக விளங்காத ஒரு கருத்து. பக்தர்களுக்கும் ஞானிகளுக்கும் ஏற்படாத ஒரு கருத்து எனக்குப் புலப்பட்டது.

ஒருமைப்பாடு என்றும், ஆன்மநேய ஒருமைப்பாடு என்றும், உலக ஒற்றுமை என்றும் உயர்ந்த உன்னதமாக இலட்சியங்களை அடைய முயன்று கொன்டிருக்கும் இந்த நாளிலே கீதை இதற்குத் துணை புரிகிறதா என்ற கேள்வி என்னுள் எழுந்தது.

அந்த கேள்விக்கு விடை காணும் முயற்சியில் இந்த நூலை ஆய்வு செய்திருக்கிறேன்.

என் ஆய்வு எந்த அளவு பயன் தந்திருக்கிறது என்பதை நீங்களே முடிவு செய்து கொள்ளுங்கள்.

இனி நீங்கள் நூலைப் படிக்கத் தொடங்கலாம்.

நாரா நாச்சியப்பன்