பக்கம்:கீதை காட்டும் பாதை.pdf/9

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
இந்த நூலில்

சுலோகங்கள், மகாகவி பாரதியார் தமிழ் மொழி பெயர்ப்பு நூலில் உள்ளபடி எடுத்தாளப் பட்டுள்ளன. பாரதியாரின் மொழி பெயர்ப்பு மற்றவர்களின் மொழி பெயர்ப்பைக் காட்டிலும் எளிமையாகவும், கவிதையுணர்வுடனும் நல்ல தமிழில் அமைந்துள்ளது; சோர்வு தட்டாத நடையில் அமைந்துள்ளதால் தொடர்ந்து படிப்பதற்குத் துணைபுரிகின்றது.

மூலத்தின் கருத்தை மாற்றாமல் உள்ளது உள்ள படி மொழிபெயர்த்திருப்பது பாரதியாரிடம் காணப் படும் மற்றும் ஒரு சிறப்பாகும்.