மக்கட் பேறு 117
ஏங்கி மாமியிடம் இசைக்க லானாள். "பெருகுவது தெரியாது பெருகுகின் றதுஉயிர்" என்பதும் உண்மை போலும்!
அன்பு பெருகுக வைய அமைஇக்கே।
நடந்து வந்த கரும்பு அசுவல்
நல்வே டப்பனின் இல்லம் நிறைந்தது. மாவரசு மலர்க்குழல் வந்திருந் தார்கள்: மற்றும் இவர்களின் மக்களும் இருந்தனர். வேடப் பன்ஒர்பால் வீற்றிருக் இன்றான். எழில்நகை முத்தும் ஈன்றதன் நீலப் பூவிழிச் செவ்விதழ்ப் புதுஇள மைந்தனை
- இளஞ்சேரன்” வாஎன இருகையில் ஏந்தி
ஒருபுறம் மமிலென உலவு இன்றாள்..
புகைப்படம் எடுக்கும் புலவரும் வந்தார் முற்றத்தில் இருக்கை வரிசையில் முடித்தார். யாவரும் வரிசையில் இருக்க லுற்றார்!
அமிழ்தம் எங்கே! அனைவரும் எழுந்தார், அறையெல்லாம் பார்த்தார் அங்கெல்லாம் இல்லை. கொல்லையில் நிலவுசெய் முல்லைக் கொடியும்: சின்னஞ் றிய செங்கஇர் போல
மன்னிய சாமந்தி மலர்ந்த செடியும்:
குலுங்கு நிலாம்பரக் குள்ளச் செடியும்,
முத்துச் சிரிப்பு முழுப்பொன் னாடை
கருவிழி இவைபூத்த கட்டிக் கரும்பும்:
அங்கே கூடி அழுகுசெய் இருப்பதைக்
கண்டனர்; கண்ணே என்றுகை மேத்தினர்;. நீலாம்பரம் அங்ஙனே நின்றி ருந்தது!
முல்லைக் கொடியும் நல்ல சாமந்தியும்.
அங்ஙனே நின்றி ருந்தன ஆயினும்,
கைதாக்கு “அப்பா! என்று கனிதமிழ்க்.
கட்டிக் கரும்பு மட்டும் கலகலத்
தண்டை பாடத் தாவி வந்தாள்.
புகைப்படப் புலவர், வகைப்பட எவரையும்.