முதியோர் காதல்
33.
கவலையிலா தாயிற்று; நன்மனைவி உடையார்! கடலுலகப் பெரும் புகழும் வாழ்நாளும் உடையார்! உலக அமைப்புக்கு இலேசு வழி இவ்வுலகில் அமைதியினை நிலைநாட்ட வேண்டின் இலேசுவழி ஒன்றுண்டு பெண்களை ஆ டவர்கள் எவ்வதையும் தாழ்த்துவதை விட்டொழிக்க வேடீளடும். தாய்மையினை இழித்துரைக்கும் நூலும்ஒரு நூலா? செவ்வையுற மகளிர்க்குக் கல்விநலம் தேடல் ' செயற்பால யாவினுமே முதன்மைஎனக் கொண்டே. அவ்வகையே செயல்வேண்டும்! அறிவுமனை யாளால் அமைதியுல குண்டாகும் என்னஇஇல் ஐயம்। மகளிர் ஒழுக்கம் பூண்டால் மருத்துவ நிலையமே வேண்டாம். மகளிரெல்லாம் கல்வியறி வொழுக்கமுள ராயின் மருத்துவமே வேண்டாவாம்; பிணிமூப்பு வாரா. மகளிரெல்லாம் அரசியலைக் கைப்பற்றி ஆண்டால் மாநிலத்தில் போரில்லை; சாக்காடும் இல்லை; 'துகளில்லா ஒருசிறிய உலகுண்டு கேட்பீர். தொல்லையில்லா அவ்வுலகம் யான்வாழும் இல்லம். பகையில்லை. அங்கின்மை இல்லை,பிணி இல்லை. பழியில்லை, என்துணைவி அரசாண்ட தாலே”. உங்கட்குப்பின் உங்கள் குடும்பம் எப்படி நடக்கும்? என்றுரைத்தார் மணவழகர்; இதைஎல்லாம் கேட்ட எழிலான மணிமொழியார்*; உங்கட்குப் பின்னர். நன்றுகுடித் தனம்நடக்கக் கூடுமோ?" என்றார்
- நான்நல்லன், என்மனைவி நனிநல்லள்: நாங்கள்
என்றும்மன நலம்உடையோம். ஆதலினால் அன்றோ, எம்மக்கள் நல்லவர்கள்; எம்மக்கள் கொண்ட பொன்னுறவைப் பெற்றோரும் நல்லர்நனி நல்லர்
பொலியும்இனி யும்குடும்பம்” என்றுரைத்தார் அழகர்.