பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/17

இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

மருமகள் வினா

"இவையெல்லாம் வண்டிக் குள்ளே இருந்தன என்றால் அந்த அவைக்களம் தனிலே நீவிர் எங்குதான் அமர்ந்திருந்தீர்? சுவைப்புளி அடைத்து வைத்த தோண்டியின் உட்பு றத்தில் கவர்ந்துண்ணும் பூச்சி கட்கும் கால்வைக்க இடமிராதே?"

மாமி விடை

என்றனள்; மாமி சொல்வாள்: "இவைகளின் உச்சி மீதில் குன்றுமேல் குரங்கு போல என்றனைக் குந்த வைத்தார்! என்தலை நிமிர, வண்டி மூடிமேல் பொத்த லிட்டார்; உன்மாமன் நடந்து வந்தார். ஊரெல்லாம் சிரித்த" தென்றாள்!

மாமன் பேச்சு

"ஊரெல்லாம் சிரிக்க வைத்தேன் என்றாளே உன்றன் மாமி! யாரெல்லாம் சிரித்து விட்டார்? எனஉன்றன் மாமியைக் கேள்; பாரம்மா பழுத்த நல்ல பச்சைவா ழைப்ப ழங்கள்! நேரிலே இதனை யும்பார் பசுமாட்டு நெய்யின் மொந்தை!

வண்டியில் எவ்வி டத்தில் வைப்பது? மேன்மை யான பண்டத்தைக் காப்ப தற்குப் பக்குவம் தெரிந்தி ருந்தால் முண்டம்இப் படிச் சொல்வாளா? என்னதான் முழுகிப் போகும் அண்டையில் நடந்து வந்தால்?" என்றனன், அருமை மாமன்.