பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/18

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

ஒருநாள் நிகழ்ச்சி

9



மருமகள் செயல்

மாமனார் கொண்டு வந்த
        பொருளெல்லாம் வரிசை செய்து,
தீமையில் லாத வெந்நீர்
        அண்டாவில் தேக்கி வைத்துத்
தூய்மைசேர் உணவு தந்து,
        துப்பட்டி விரித்த மெத்தை
ஆம், அதில் அமரச் சொல்லிக்
        கறிவாங்க அவள் நடந்தாள்.
கடையிலே செலவு செய்த
        கணக்கினை எழுதி வைத்தாள்;
இடையிலே மாமன் "விக்குள்
        எடுத்தது தண்ணீர் கொஞ்சம்
கொடு"எனக் கொடுத்தாள். பின்னர்க்
        கூடத்துப் பதுமை ஓடி
அடுக்களை அரங்கில், நெஞ்சம்
        அசைந்திட ஆட லானாள்.

என்ன கறி வாங்கலாம்?

கொண்டவர்க் கெதுபி டிக்கும்
        குழந்தைகள் எதைவி ரும்பும்
தண்டூன்றி நடக்கும் மாமன்
        மாமிக்குத் தக்க தென்ன
உண்பதில் எவரு டம்புக்(கு)
        எதுவுத வாதென் றெல்லாம்
கண்டனள், கறிகள் தோறும்
        உண்பவர் தம்மைக் கண்டாள்!

பிள்ளைகள் உள்ளம் எப்படி?

பொரியலோ பூனைக் கண்போல்
        பொலிந்திடும்; சுவைம ணக்கும்!
"அருந்துமா சிறிய பிள்ளை"
        எனஎண்ணும் அவளின் நெஞ்சம்;
இருந்தந்தச் சிறிய பிள்ளை
        இச்சென்று சப்புக் கொட்டி
அருந்தியே மகிழ்ந்த தைப்போல்
        அவள்காதில் ஓசை கேட்கும்!

பா. 2