பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/25

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

16 வீட்டறை மருந்துவமனை படுக்கையில் மாம னாரைப் பார்த்தனள்; "காலில் இன்னும் கடுக்கை தீர்ந்திலதோ" என்று கணிவோடு கேட்டு டுக்கும் உடுக்கையும் மாற்று வித்து. மட்டான உணவு தந்து தடுக்கிளி லிருந்து தூக்கிச் சாய்வு நாற்காலி சேர்த்தாள். மற்றும் வீட்டு வேலை வரிசையாய்க் காய வைத்த வடகத்தை. வுற்றல் தன்னைப் பெரிசான சாலில் சேர்த்தாள்: பிணைந்துள்ள மாடு கன்றுக்(கு) உரியநல் தீனி யைத்தாள்! உறிளைக் குகள்து டைத்தாள்: வரும்மக்கள் எதிர்பார்த் திட்டாள் வந்தளர்: மகிழ்ச்சி பெற்றாள். கடற்கரையில் சிற்றுண வளித்தாள்; பின்பு திரைகடற் கரையை நாடிப் பெற்றதன் மக்கள் சூழப் பெருவீதி ஓர மாகப் பொற்கொடி படர்ந்தான் தேனைப் பொழிந்திடு பூக்க ளோடு! வற்றாத வெள்ளக் காட்டின் மணற்கரை ஓரம் வந்தாள்! கடற்கரைக் காட்சி அக்கரை செலும்உள் ளத்தை அளகவிடக் கிடந்த வில்லும் இத்தரை அலையின் ஆர்ப்பும். இவற்றிடைச் செவ்வா னத்தின் மீக்கொளி மிதக்கும் மேனி விரிபுனற் புரட்சிப் பாட்டும்.

  • ஓக்கவே வாழ்க மக்காள"

என்பதோர் ஒலியும் கேட்டாள; குடும்ப விளக்கு