பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஒருநாள் நிகழ்ச்சி காட்சி இன்பம் குளிர்புனல் தெளிவி வெல்லாம் ஒளிகுதி கொள்ளும்; வெள்ளத் துளிதொறும் உயிர்து டிக்கும்; தொன்மைசேர் கடல்.இவ் வைய வெளியெலாம் அரசு செய்யும் விண்ணெலாம் ஒளியைச் செய்யும்! கனியெலாம் காணக் காணக் கருந்தெலாம் இன்பம் பொங்கும்! கடற் காற்று "கடலிடைப் புனலில் ஆடிக் குளிரினிற் கனிந்த காற்றை உடலிடைப் பூசு கின்ற ஒலிகடற் கரையின் ஓரம் அடர்சிற கனப் புட்கள் அணிபோல அவைந டக்கும் நடையொடு நடந்து வீடு நண்ணினாள் மக்க ளோடு, இரவுக்கு வரவேற்பு மேற்றிசைக் கதிர்ப்ப விருந்துண்டு. நீல ஆடை மாற்றுடை யாய் உடுத்து, ழத்தை மரகத அணிகள் பூண்டு, கோற்கிளை ஒடுங்கும் புட்கள் கோட்டிடும் இறகின் சந்தக் காற்சிலம் பசையக் காதற் கரும்பான இரவு தன்னை; திருவிளக் கேற்தி வத்து தெருவினில் வரவேற் கின்றாள். உருவிளக் கிடவீட் டுக்குள்: ஒளிவிளக் கனைத்தும் ஏற்றி. ஒருபெருங் கலயத் துள்ளே உயர்நறும் புகை எழுப்பிப் பெரியோரின் உள்ளம் எங்கும் பெருகல்போல் பெருகச் செய்தான். 17