பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/42

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
என்றுரைத்துப் பின்னும்
இயம்புகையில், அவ்விடத்தில்
தலைவி விருந்துவந்த பெண்ணாளிடம்
நின்றிருந்த வீட்டின்'
தெடுந்தலைவி-நன்றே
விருந்துவந்த பெண்பால்
விரும்பிய வண்ணம்
இருந்தொருபால் பேசி
இருந்தாள்-பொருந்தவே.
நாவரகம் நகைமுத்தும்
நாவரகம் முத்தாள்
நகைமுத்தும் வீதியிலே
பூவரா நிழலிலே
போய்அமர்ந்தார்-மாவரசர்
தம்சேதி கூறிப்பின்
தங்களுடல் முன்னைவிடக்
கொஞ்சம் இளைப்பென்று
கூறிடவே-"மிஞ்சாமல்
முதியவர்தம் பழைய நினைப்பு
இன்னும் இருக்குமோ
இளமைப் பருவத்தாள்?"
என்று கிழவர்
இயம்பமுற்றார்-இன்றைக்கு
முன்புதைத்த சட்டைக்கு
மூன்றிலொன்று தான்உடம்பு
முன்புதைத்த மூங்கில்தாள்
என்என்பு-மின்னுதனிர்
மாவிலைபோல் மேனி
வளவளத்துப் போயிற்றே
பாவில் ஐந்துபாடி
மகிழுதற்கும்-நாவிலையே
மாடிப் படியேறும்
வாய்ப்பில்லை பேரர்களை
33