பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

விருந்தோம்பல்
என்னவெளில், இவ்வறத்தைச்
செய்தின்பம் எய்துவதான்!
மக்கட் பேறு
நன்மக்கட் பேறுபற்றி
நானுரைப்ப-தொன்றுண்டாம்.
ஈண்டுக் குழந்தைகள்தாம்
எண்மிகுந்துப் போகாமல்
வேண்டும் அளவே
விளைத்து, மேல்-வேண்டாக்கs
சேர்க்கை ஒழித்துக்
கருத்தடை பேனும்செய்க
போக்கருநோய் கொண்டால்'
இருவரும்-யாக்கை
ஒருமித்தால் ஐயகோ!
உண்டாகும் பிள்ளை
இருநிலத்துக் கென்னநலம்
செய்யும்-அருமைத்
பிறர் நலம்
தலைவன் தலைவியர்கள்
தங்கள் குடும்ப
அவைநிட் ரியபின்
அயலார்-நிலைதன்னை
நாடலாம் என்னாமல்
நானிலத்தின் நன்மைக்குப்
பாடு படவேண்டும்.
எப்போதும்-நாடோ
ஒருதீமை கண்டால்
ஒதுங்கி நிற்றல் தீமை:
எருதுமோ மொய்த்த
போது-பெருவால்
சுழற்றுவதால் துன்பம்
தொலையுமா?-ஈக்கள்
புழுக்குமிடம் தூய்நாகிப்
போருமா?-இழுக்கொன்று