பக்கம்:குடும்ப விளக்கு, முழுதும்.pdf/93

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 குடும்ப வினக்கு.


இன்பத்‌ துறை எண்டர்‌ விருத்தம்‌ கட்டிலிட்டார்‌ மெத்தை,தலை யணைகள்‌ இட்டார்‌ கண்கவரும்‌ வெண்துகலும்‌ விரித்தார்‌ மேலே. பட்டுப்போர்‌ வைமடித்துப்‌ பாங்கில்‌ வைத்தார்‌. பட்டஇடம்‌ கமழ்இன்ற பன்னீர்‌ வீச, தட்டுகன்ற காம்பகற்றி மலர்கள்‌ இட்டுச்‌. சந்தனம்பன்‌ னீர்‌,அடைகாய்த்‌ தட்ட மைத்து, மட்டின்றி முக்கனி,பால்‌, பண்ணி யங்கள்‌ வைத்தெங்கும்‌, விளக்கங்கள்‌ ஏற்றி னார்கள்‌. மிகச்ிறப்புச்‌ செய்‌இட்ட தணிய றைக்கு. வெளிப்புறத்துத்‌ தாழ்வாரம்‌ நிறையக்‌ கூடி நகைத்தாடும்‌ ருழந்தைகளில்‌ ஒருவன்‌ கேட்டான்‌ "நாங்கள்விளை யாடும்‌அறை இதுவோ: என்று "புகவேண்டாம்‌, புதுமணப்பெண்‌ புதுமாப்‌ பிள்ளை புலவர்தரு இருக்குறளின்‌ பொருளாய்‌ தற்கு, வகைசெய்து வைத்தஇடம்‌, வாழ்வில்‌ இன்பம்‌ 'வாய்க்கும்‌இடம்‌! மணமக்கள்‌ வாழ்க நன்றே.