பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


"பொறியின்மை யார்க்கும் பழியன்று அறிவறிந்
தாள்வினை இன்மை பழி.” (618)

என்று கூறுகிறது.

மூலதனம் ஊழை மறுக்கிறது. திருக்குறள் ஊழ்த் தத்துவத்தை உடன்பட்டு மறுக்கிறது. மதவாதிகள் கூறும் ஊழின் வலிமையைத் திருக்குறள் ஏற்றுக் கொள்வதில்லை. மனித குலத்தால் ஊழினை வெற்றி பெறமுடியும் என்பது வள்ளுவத்தின் முடிவு. ஊழ் என்பது நேற்றைய வாழ்க்கையின் தொடர்ச்சி. நேற்றைய பழக்கங்களின், வழக்கங்களின் முகிழ்ப்பே ஊழ். “பழக்கம் தவிரப் பழகினால்” ஊழின் நிலை மாறும்; அகலும், ஆக இரண்டு நூல்களுமே ஊழின் வலிமையால் இந்த உலகத்தில் உள்ள சாதிமுறைகள், பொருளாதார ஏற்றத்தாழ்வுகள் அமைய வில்லை என்ற கருத்தில் ஒத்து நிற்கின்றன.

'மக்கள் பிறப்பில் எந்த வேறுபாடுகளுக்கும் ஏற்றத் தாழ்வுகளுக்கும் ஊழ் காரணமல்ல. இக்கருத்தினை மார்க்சியம் வலியுறுத்துகிறது. - “பிறப்பொக்கும் எல்லா உயிர்க்கும்” என்று திருக்குறளும் வலியுறுத்துகிறது. பிறப்பால் எல்லா உயிர்களும் சம உரிமைகள் உடையன. ஒரோவழி சுற்றுப்புறச் சூழ்நிலையின் காரணமாக, வாய்ப்புகளின் காரணமாகச் சிறப்புடையோராக விளங்கினாலும் அதற்காக எந்தவிதச் சிறப்பினையும் தனி உரிமைகளையும் பெற இயலாது; பெறக்கூடாது, அந்தச் சுற்றுப்புறச் சூழ்நிலையும் வாய்ப்புக்களும்கூட வரலாற்றுப் - போக்கில் சமூகம் படைத்தளித்தவைதாம்.

சுரண்டும் பொருளாதார அமைப்பை மார்க்சியம் அடியோடு மறுக்கிறது. திருக்குறளும் சுரண்டும் பொருளா தார அமைப்பைச் “சலத்தால் பொருள் செய்தல்” “அவ்விய நெஞ்சத்தான் ஆக்கம்” என்றெல்லாம் மறுத்துரைக் கிறது.

"சலத்தாற் பொருள் செய்தே மார்த்தல் பசுமண்
கலத்துள்நீர் பெய்திரீஇ யற்று”, (660)