பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/268

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

264 ☆ தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தீயுழி உய்த்துவிடும் என்றார். இம்மைக்கு வேண்டிய செல்வம், மறுமைக்கு வேண்டிய வீடு இரண்டையும் கெடுத்தலால் அழுக்காறு கொடுமையினும் கொடுமை யானது. வள்ளுவரே 'பாவி' என்று வசைபாடுவாராயின் நம்நிலை என்ன?

அழுக்காறு கொள்ளுதல் தீது. முற்றிலும் உண்மை - முக்காலும் உண்மை. எந்த ஒரு தீமையும் தோன்றாமல் தடுப்பதும் பாதுகாக்க வழிவகை யுண்டல்லவா? அத் தீமை தோன்றாமல் தடுப்பதும் சமுதாய நெறியில் மிகச் சிறந்ததாகும். கயவர்களின் அழுக்காறு மாற்ற முடியாதது. அவர்கள் கொல்லத்தான் பயன்படுவார்கள். ஆனாலும், சாதாரண-நடுத்தர மக்களிடமிருந்து அழுக்காற்றை அகற்ற உடையோர் முயன்றால் முடியும். அழுக்காறு கொள்ளுதல் எப்படித் தீதோ அப்படியே பிறர் எளிதில் அழுக்காறு கொள்ளும்படி நடந்து கொள்ளுதலும் தீதாகும்.

அதனால் செல்வம் உடைமையினும் எளிய வாழ்க்கை - கொடுத்து உவந்து - ஒப்புரவு அறம்பேணி வாழ்தல் அவசியம். அறிவுடைமையில் தன்னடக்கம் தேவை. புகழை விரும்பாமல் அடக்கமாய் வாழ்தல் அவசியம். பிறர் புகழ்ந்து கூறும் சந்தர்ப்பங்களையெல்லாம் தவிர்க்க முயலவேண்டும். இங்ஙனம் வாழ்ந்தால் இல்லாதோரிடம் அழுக்காறு எழாமல் - தோன்றாமல் தவிர்க்கலாம். காரணம் அங்கு இன்மை அவ்வளவு பெரியதாகத் தோற்றம் அளிக்காது.

அழுக்காறாமைக் குணத்தை மேற்கொள்ள வேண்டுமாயின் அதற்கு முதன் முயற்சி மற்றவர்கள் எல்லாவற்றையும் பெற்று வாழ வேண்டும் என்று விரும்புதல் - பிறர் இன்பத்தில் தான் மகிழும் பழக்கத்தை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும். காலப் போக்கில் அழுக்காறு அகலும் - அருளியல் தோன்றும்.