பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 1.pdf/341

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருக்குறள் ☆ 337



ஆள் முக்கியமல்ல

னிதர்களுக்குள் பொருளியல் சண்டைகள் வருவது போலவே, கருத்துவழிச் சண்டைகளும் தோன்றுவதுண்டு. ஒருவருடைய கருத்தைவிட இன்னொருவருடைய கருத்து உயர்ந்தது என்கிற எண்ணம் தோன்றுகிறபோதும் தன் கருத்தை மற்றவர்கள் எவ்வித நிபந்தனையுமின்றி ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற முயற்சி தலைகாட்டுகிற பொழுதும் சண்டைகள் தோன்றுகின்றன. ஒரு கருத்தை ஏற்றுக் கொள்வது அல்லது மறுப்பது என்பதனை அக்கருத்தைச் சொல்லுகின்றவர்களை வைத்து மட்டும் முடி வெடுக்க முடியாது. எந்த ஓர் இனத்திற்கும் தன்னுடைய தனித்தன்மையைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டும் என்ற ஆர்வம் இருப்பது மனித இயல்பை ஒட்டியதுதான்; தனித் தன்மையைக் காப்பாற்றிக் கொள்வதும் பிறருடைய கருத்தை ஏற்றுப் போற்ற மறுப்பதும் ஒன்றல்ல. தனித் தன்மையைக் காப்பாற்றாது போனாலும், ஒரு இனவழிப்பட்ட நாகரிகத்திற்கு - கலாச்சாரத்திற்கு அடிச்சுவடே இல்லாமற் போய்விடும். அது மட்டுமல்ல - நாடுகளுக்கும் சூழல்களுக்கும் ஏற்றவண்ணம் ஒழுக்கம், ஒழுக்கமின்மை களிற்கூட வேறுபாடுகள் நிலவுவது இயற்கை.

மகாபாரத கலாச்சாரத்தில் ஒருத்தி ஐவருக்கு மனைவியாக இருக்கமுடியும். அது சமுதாய ரீதியாக ஏற்றுக் கொள்ளப்பெற்ற ஒழுக்கம். இதை நாம் அநாகரிகம் என்று கூறுவதற்கில்லை. இதற்கு அடிப்படை அந்தச் சமுதாயத்தில் உள்ள ஆண் பெண்களின் விகிதாசார எண்ணிக்கையேயாகும். ஆனால் தமிழகத்தின் சூழ்நிலை வேறு. ஆதலால் பிறருடைய கருத்தைக் கேட்டு, சிந்தித்து, அக்கருத்து தன்னுடைய தனித் தன்மைக்கு இடையூறு செய்யாமல் -தன்னுடைய நாகரிகத்தை வளர்த்துச் செழுமைப்படுத்த


தி.-22.