பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்






மார்ச் 12


செந்நெறி நின்று வாழ்ந்திட அருள்க!


இறைவா, வாழ்க்கை ஒரு நேர்கோடு. பல புள்ளிகள் இணைந்த ஒரு கோடு. ஒரு புள்ளி இடம் மாறினாலும் கோடு கோணலாகி விடும். ஆம். இறைவா, நானும் முயற்சி செய்கிறேன். என் வாழ்க்கை நேர்கோடாக, ஆனால், முடியவில்லையே? என் வாழ்க்கை நேர்கோடாக வேண்டும். அதுவே என் ஆசை. இறைவா, அருள் செய்க!

செம்மை- உழைப்பில் விளைவது. உழைத்து வாழ்தல்; பகுத்துண்டு வாழ்தல்; மனத்துக்கண் மாசிலனாக வாழ்தல்; பொறிகளில் அழுக்கு இன்றி வாழ்தல்; ஒன்றுபடுதல் ஆகியன, செம்மை நல்கும் பண்புகள். பண்பாள! இறைவா! செந்நெறியில் நின்று வாழ்ந்திட அருள் செய்க.