186
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா, பாவநாசா, புண்ணிய மூர்த்தியே! இறைவா, இந்த உலகத்தில் ஒருவன்கூட பாவத்தைச் செய்யாதவன் - பாவத்தை எதிர்க்காதவன் இல்லை! ஏன்? ஒருவன் ஓர் அநியாயத்தைப் பார்த்துக் கொண்டிருந்தாலும் அவன் ஒரு பாவியே.
இறைவா, இன்று இந்த உலகத்தில் அநியாயத்தைத் தவிர வேறு என்ன நிகழ்கிறது! இந்த அநியாயத்தைப் பாராட்டிக் கூறும் இழிநிலையும் வளர்ந்து விட்டது. அநியாயமே நியாயமாகிவிட்ட காலம் இது. இறைவா, என்னைக் காப்பாற்று!
என் வாழ்க்கை நிலையானது அல்ல. ஆனால் நான் வாழும் வாழ்க்கையை நிலையானதாக்கலாம். அநியாயங்களை நான் எதிர்க்க வேண்டும்.
நான் நியாயங்கருதிப் போராட வேண்டும். உழைக்காமல் வாழ்தல், ஊரைக் கொள்ளையடித்து உலையில் போடுதல், பிரிவினைப்படுத்துதல், சாதி, இன, மதப் பிரிவினைகளை வளர்த்தல், கொலை, கொள்ளைகள் நிகழ்த்துதல் ஆகிய பொல்லாங்குகள்-பாவங்கள் நிறைய நடக்கின்றன! இவைகளை நான் பார்த்தும் பாராமல் இருக்கின்றேன்! இல்லை இறைவா, பல சமயங்களில் உடன்பட்டும் இருக்கின்றேன். இறைவா, என்னை மன்னித்து அருள் செய்க!
நான் இனி பாவச் செயல்களைக் கண்டிப்பேன். இனிச் செய்யமாட்டேன், துணையும் போக மாட்டேன். இறைவா, அருள் செய்க!