பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/381

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட்சிந்தனை

369





டிசம்பர் 18<



இறைவா, உனக்கு அடிமை பூண்ட நான் அவலப்படுதல் ஆகாது! அருள் செய்க!

இறைவா! ஏன் இந்தச் சோதனை? நான் அறியாதவன்! வலிமையற்றவன்! உன் கருணையால் உய்ய வேண்டியவன்! அப்படி இருந்தும் ஐம்பொறிகளாகிய கள்வரோடு கூட்டு வைத்துக் கொடுத்தனை! ஐம்பொறிகளின் கூட்டு, என் வளர்ச்சிக்குத் துணையாக இல்லை! நான் நாள்தோறும் இவைகளுடன் தொடர்ந்து போராட வேண்டியிருக்கிறது! போராட்டத் திலும் அவைகளே வெற்றி பெறுகின்றன! இறைவா, என்னைக் காப்பாற்று!

இவைகளுடன் கூட்டு இப்போதைக்கு அகலாது போலிருக்கிறது. இவைகளுக்கு வேறு நல்ல வேலை கொடுத்து எனக்கு உண்மையான கூட்டாக இருக்கப் பணித்தருள் செய்க!

ஐம்பொறிகளின் சேட்டைகளால் நான் செய்த பிழை களைப் பொறுத்தாள்க! இனிமேல் பிழைகள் வராமல் காத்தருள்க! நான் உனக்கு அடிமை, நீ என்னை ஆண்டருள் செய்யும் கடமை உடையவன்! உனக்கு அடிமை பூண்ட நான் அவலப்படுதல் ஆகாது! என்னைக் காப்பாற்று!

என் கண்களுக்குக் கைபுனைந்து இயற்றாத அழகுமிக்குடைய இயற்கை எழிலைக்கண்டு மகிழ ஆணை தந்திடுக! என் செவிகள் நல்லனவே கேட்க, நின்னுடைய பொருள் சேர் புகழைக் கேட்கவேண்டும்.

இறைவா, நின் புகழை நான் நாளும் இசைத்திடுதல் வேண்டும். நின்னுடைய மணமே நுகர்ந்து அனுபவித்திடுதல் வேண்டும். இறைவா! இயற்கை எழிலைக் கண்டு மகிழ்ந்து வாழ அருள் செய்க!