பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 10.pdf/61

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

திருவருட் சிந்தனை

49






பிப்ரவரி 2


மனம் திருந்தினால் மண்ணில் சொர்க்கம்!


இறைவா, என்னுடைய மனம் கூட்டாட்சிக்கு ஒத்து வர மறுக்கிறது. நான் என் மனத்தினைக் கெஞ்சிக் கேட்டு விட்டேன். மனமே, புத்தியுடன் கலந்து ஆலோசனை செய். சித்தத்துடன் சேர்ந்துபேசி முடிவு செய் என்றால் மனம் மறுக்கிறது. புத்தியோ மனத்தை மேவ முடிவதில்லை. மனம் முன்பே ஐம்பொறிகளைத் தன் வயப்படுத்திக் கொண்டு விட்டது. ஆதலால் புத்தியில்லாமல் மனம் போன போக்கில் ஊரைச் சுற்றி ஏய்த்துக் களைத்துப் போனேன். இறைவா, என்னை மன்னித்துக் கொள். மனத்தினை அடக்கியே தீர்வது என்று முடிவு செய்துவிட்டேன். முதலில் மனத்துக்குத் துணையாக இருக்கும் பொறிகளுக்கு இரை கொடுப்பதில்லை என்று உறுதி எடுத்துள்ளேன். உடலை வருத்தினால், மனம் அடங்கத்தானே செய்யும். இந்த மனம், வேலையில்லாத நேரத்தில்தான் வீண் வேலை செய்கிறது. ஆதலால் ஓயாது ஒழியாது மனத்துக்கு வேலை பொறிகளுக்குக் குறிப்பாக வாய்க்கு ருசியாகத் தீனி கொடுப்பதில்லை என்பது எனது முடிபு. எல்லாம் நினைப்பு, முடிபு. ஆனால், உன் துணை இல்லாமல் என்ன சாதித்துவிட முடியும். இறைவா, துணை செய். என்னுடனேயே இருந்தருள்செய். மனம் திருந்தி விட்டால் மண்ணில் சொர்க்கம்.


கு.x.4

கு.x.4