இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
65
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
இறைவா! மூடர்களையும் படைத்து, புத்திசாலிகளையும் படைத்து ஏன் வேடிக்கை பார்க்கிறாய்? மூடர்களுடன் பேசவே முடியவில்லையே. பேசுபவர்களை முட்டாள்களாக்கி விடுகிறார்களே. மூடர்களுடன் தர்க்கம் செய்வதைத் தவிர்த்துவிட எனக்கு அருள் செய்! வேண்டவே வேண்டாம், விவேகம் இல்லாதவர்களுடன் தர்க்கம்.
முத்தி நெறி அறியாத மூர்க்கர்களுடன் கூடாமலே இருக்க அருள் செய்க. அறியாமையின் பிடிவாதம், மூர்க்கத்தனமானது, ஆபத்தானது. சிலர் தோளாச்சுரை போல இருப்பர், தோட்கப்படாத செவியுடையராய் இருப்பர். இறைவா! இவர்தம் உறவு வேண்டாம்.
அறிஞரோடு கூட்டுவித்து அருள் செய்க! அடியார் நடுவுள் இருக்கும் அருளைப்புரிந்து என்னை வளர்த்திடு. வாழ்வித்திடு!
கு.x.5