பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/238

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

234

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


பொறை கெடும்; மீண்டும் உலக நாடுகளை வருத்தி வரலாற்றுக்குச் சீரழிவு செய்த சமயக் கலகங்கள் நிகழ வாய்ப்பளித்ததாகிவிடும்.

ஆதலால், உண்மையான சமய நம்பிக்கையுடைய ஒவ்வொருவரும் இன்றைய நிலையில் இந்தியாவைச் சமயச் சார்பற்ற நாடாக விளங்கச் செய்ய மனம் ஒப்பி முன்வர வேண்டும். மறைவாகக் கூட சமயப் பொறைக்கு எதிரான சிந்தனைகளை, செயல்களை யாரும் ஊக்குவிக்கக்கூடாது. அவரவர் தத்தம் சமயநெறியை மேற்கொண்டொழுதல், முறையாக வளர்த்தல் ஆகிய பணிகளில் ஈடுபடுதல் நல்லது.

ஒரு நாட்டின் நிலப்பரப்பில் பிறிதொரு நாடு ஆக்கிரமித்தல் எங்ஙனம் தவறு என்று “உலக நாடுகளின் பேரவை” விதிகள் இயற்றியுள்ளதோ அதுபோலச் சமய நெறிகளும் பிறிதொரு சமயத்தை மேவி அமுக்குவதில்லை; சமயக் கருத்துக்களில் கலப்படம் செய்வதில்லை என்ற நியாயத்திற்கு உடன்பட்டு வரவேண்டும்.

இன்று உலக நாடுகளின் அரசியல், ஆட்சி உரிமைகள், பொருளியல் காரணமாக நாடுகளிடையில் மோதல்கள் வராமல் தடுக்கும் பணி இதன் பணி வளரும் நாடுகளுக்கு வளர்ந்த நாடுகள் உதவி செய்கின்றன. இந்த உலக நாடுகள் பேரவையின் பணியால் பதட்டநிலை கட்டுப்படுத்தப் படுகிறது. அதுபோல உலகச் சமயங்களின் பேரவை சண்டைகளைத் தவிர்க்கவேண்டும். பல உறவுகளை வளர்க்க வேண்டும். காலப்போக்கில் உலகப் பொதுச் சமயம் காண வேண்டும். சமய நெறித் தலைவர்கள் இது பற்றிச் சிந்தனை செய்ய வேண்டும். உலகச் சமயப் பேரவை தோன்றின் மனித குலம் மேம்பாடுறும்.

இன்று உலகம் பதற்ற நிலையிருக்கிறது. ஒவ்வொரு நாளும் படைகளைப் பெருக்கி வளர்க்கிறது. சில விநாடிகளில் மனித உலகத்தை-உயிரினங்களை அழிக்கக்