பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 11.pdf/277

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொடியா? கொம்பா?

2713


இங்கிலாந்தில் நடைபெற்ற ரோஜாப்பூச் சண்டைகளும் ஆதிபத்திய நோக்கத்தோடு சமயத்தின் பேரால் போட்டுக்கொண்டவைகளேயாம்.

ஒரு சாக்கடைக்குழி!

“மதம் எனும் பேய் பிடியாதிக்க வேண்டும்” என்று இராமலிங்க அடிகள் கூறியிருப்பது உண்மை. மதம் அனுபவத்துக்கு உரியது. ஆனால் சிலரைப் பேய்போல் பற்றிக்கொண்டு அவரையும் வாழவிடாமல்-மற்றவர்களையும் வாழவிடாமல் சண்டைகளை விளைவிப்பதைப் பார்த்துச் சொன்னாரே தவிர வேறு அல்ல. சமயநெறியின் பெயரால் மக்களிடையே வாழ்க்கைக்கு ஒத்துவராத பல கொள்கைகள் புகுந்து அவர்களை முன்னேற ஒட்டாது தடுத்து நிறுத்தின. அப்போலிக் கொள்கைகளை வெறுத்துப் பேசி அவர்களைத் திருத்தும் பொறுப்பை மேற்கொண்டார் இராமலிங்க அடிகளார்.

பணம் தேங்கிக்கிடக்கும் முதலாளித்துவம் ஒரு சாக்கடைக்குழி போன்றது. சாக்கடைக் குழியில் ஈயும் கொசுவும் தோன்றித் தொத்து நோய்களை வளர்க்கின்றன. அதுபோல முதலாளித்துவத்தைச் சுற்றிப் போலிகளும்- ஏமாற்றுக்காரர்களும்- காக்காய் பிடிப்பவர்களும்- உறிஞ்சி வாழும் சோம்பேறிகளும்- நன்றியறிதல் இல்லாதவர்களும்- மனித இனத்தின் பகைவர்களும் மொய்த்து வம்புவழக்கு என்ற தொத்து நோய்களை வளர்க்கிறார்கள். இத்தகைய முதலாளித்துவத்தால்தான் இடைக்காலச் சமயத்தில் கறை படிந்தது.

உண்மை இதே

முதலாளித்துவம் கடவுளையே விலைக்கு வாங்கும் அளவுக்குச் சக்தி படைத்தது. அது தன்னுடைய சுரண்டல் கொள்கைக்கு மதத்தை ஒரு கருவியாக ஆக்கிக்கொண்டது. அப்பொழுதுதான்.