பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/130

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

118

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


“வறுமையாம் சிறுமை”21

என்று சிவஞான சித்தியாரும்

“நல்குரவென்னும் தொல்விடம்”24

என்று திருவாசகமும் கடிந்து கூறுகின்றன. வறுமை, வளம் என்கிற வேறுபாடு இயற்கை என்றோ, கடவுளின் படைப்பு என்றோ, மாற்ற முடியாதது என்றோ, மாற்றக்கூடாதது என்றோ சைவ சித்தாந்தம் கூறவில்லை. இன்னும் தெளிவாகச் சொன்னால், இத்துறையில் சைவசித்தாந்தச் சமய நெறியாளர்கள் துறைபோக ஆய்வு செய்தார்கள் என்று கூறுவதற்கில்லை. அது மட்டுமன்று, அங்ஙனம் துறைபோக ஆய்வு செய்வதற்குரிய சூழல்கள், மெய்கண்ட நூல்களும் திருமுறைகளும் தோன்றிய காலத்தில் இல்லை. அந்தக் காலத்தில் தமிழ்நாட்டில் - இந்திய நாட்டில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றவில்லை. பண்ணையடிமைச் சமுதாயம் இருந்தது. பண்ணையடிமைச் சமுதாயத்திலும் கூட, நுகர்வுகளின் எல்லை குறைவாக இருந்தமையினாலும் மூல தனம் தோன்றாமையினாலும் இத்துறையில் அதிகக் கவனம் ஈர்க்கப்படவில்லை. இதனை,

“தென்கடல் வளாகம் பொதுமை யின்றி
வெண்குடை நிழற்றிய வொருமை யோர்க்கும்
நடுநாள் யாமத்தும் பகலும் துஞ்சான்
கடுமாப் பார்க்கும் கல்லா வொருவற்கும்
உண்பது நாழி உடுப்பவை இரண்டே
பிறவு மெல்லாம் ஒரொக் கும்மே
செல்வத்துப் பயனே யீதல்
துய்ப்பே மெனினே தப்புந பலவே”23

என்ற புறநானூற்றுப் பாடலால் அறியலாம். மார்க்சு காலத்தில் உலக நாடுகளுள், பல நாடுகளில் முதலாளித்துவ சமுதாயம் தோன்றிவிட்டது; பணப் புழக்கம் தோன்றி