பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/290

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

278

தவத்திரு குன்றக்குடி அடிகளார்



திருப்பதிக அருச்சனை

அ. சைவ பன்னிரு திருமுறைகளில், எந்த ஒரு பதிகத்தையாவது அல்லது பகுதியையாவது அப்படியே ஓதி அருச்சனை செய்வது திருப்பதிக அருச்சனையாகும்.

ஆ. திருமுறைப்பாடல்களிலிருந்து தொகுக்கப்பெற்ற சொற்றொடர்களை வைத்து நூற்றெட்டு, ஆயிரத்தெட்டு என்று தொகுக்கப் பெற்ற அருச்சனைக் கொத்துக்களைக் கொண்டு செய்வது தமிழ் அருச்சனையாகும்.

குறிப்பு:-

கடையம் சு.சு.தெ. அருணந்தி சிவாச்சாரியார் அவர்கள் 1946ல் தொகுத்து வெளியிட்டுள்ள திருநெறி அருச்சனைக் கொத்தையும் திருநெல்வேலி சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகம் கழகப்புலவர் ப. இராமநாதபிள்ளையைக் கொண்டு வெளியிட்டுள்ள “மலர் பாட்டு வரிசை” நூலையும் பயன்படுத்தலாம்.

இ. அருச்சனைப் பதிகத்தை அல்லது அருச்சனைக்குரிய மொழிகளை அருச்சகரே பயின்று ஓதிச் செய்வது வரவேற்கத்தக்கது. அதற்குரிய காலம் வரும்வரை எப்படி சமஸ்கிருத அருச்சனையை அத்யானபட்டர் சொல்ல அருச்சகர் அருச்சிக்கிறாரோ, அதுபோல, திருமுறை ஆசிரியர் ஒத, அருச்சகர் அருச்சிக்கலாம்.