பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/291

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.






4


ஆசீர்வாதப் பேருரை

சென்னை சைவ சித்தாந்த சமாஜம்
46-வது ஆண்டு விழா


சித்தாந்தச் சிவநெறிச் செல்வர்களே!

சைவ சித்தாந்த மகாசமாசம் இந்த ஆண்டு விழா நிகழ்ச்சி குன்றக்குடியில் நிகழ்ந்தது குறித்து மகிழ்ச்சி. அம்மகிழ்ச்சியில் திளைக்கின்ற உள்ளத்தோடு ஒரு சில சொல்ல விரும்புகின்றோம்.

சமயத்தின் தோற்றம்

உலகியல் பொதுவாக, துன்பச் சூழலிலேயே உழலுகின்றது. இத்துன்பச் சூழலிலும், இன்பதைக் காணமுயல்வது அறிவுடைமை. இதனையே,

“இன்னாதம்ம இவ்உலகம்
இனியகாண்க இதன் இயல்புணர்ந்தோரே”

என்று, புறநானூறு பேசுகின்றது. இன்பத்திற் கிடையூறாக, துன்பத்திற்குக் காரணமாக-நம்மை ஒருநோய் பிடித்துள்ளது. அந்த நோய் யாது? அந்நோய்க்கு மூலகாரணம் யாது?