பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/317

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மனம் ஒரு மாளிகை

305


“ஒடுங்கி நிலைபெற்ற உத்தமர் உள்ளம்
நடுங்குவ தில்லை நமனுமங் கில்லை.—"

எனத் திருநாவுக்கரசர் கூறுவதுபோல் தன்னை அறிந்தால் ஆங்குத் தன் மனத்துள்ளே மறைந்துள்ள ஈசனைக் காணலாம்.

“விறகில் தீயினன் பாவிற்படு நெய்போல்
மறைய நின்றுளன் மாமணிச் சோதியான்
உறவு கோல்நட் டுணர்வுக் கயிற்றினால்
முறுக வாங்கிக் கடையமுன் நிற்குமே”

— தேவாரம்

மனம், வாக்கு, காயத்தால் வல்வினைகள் ஆரம்ப மாகும். வல்வினை ஆரம்பமாகிய போது பிறவி உண்டாகும். பிறவி தொடரும்போது பாவ, புண்ணியங்கள் வந்து சேரும். இதையே பிறவி வாசனை என்பார்கள். மனம், வாக்கு காயம், நேர் நிற்கில் பிறவியில்லாப் பெருநிலையை அடைவர்.

“அனைத்துலகும் ஆய நின்னை
ஐம்புலன்கள் காண்கிலா”

- என்பதாலும்,

“இரந்து இரந்து, உருக என் மனத்துள்ளே
எழுகின்ற சோதியே”

என்ற திருவாசகத்தாலும் “தன்னை யறிந்தின்ப முற்றோர்” நிலையை உணரலாம்.

தன்னை அறிந்து இன்பமுற்றோர்களுக்கு இருவேறு பட்ட தன்மைகளே ஆங்கு இல்லை. இப்புன்புலால் யாக்கையில் உயிர் புணர்ந்து கொண்டிருக்கும் போதே எது எதுவோ அது அதுவேயாகி அருட்சோதியில் கலத்தலே தன்னையறிந் தின்பமுறுதல் ஆகும்.

“தன்னை யறிந்திருந்த தத்துவ ஞானிகள்
முன்னை வினையின் முடிச்சை யவிழ்ப்பார்கள்