பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

21


உருவம் தேவைப்படாது. ஆனால், சராசரி மனிதர்கள் - சிந்திக்க மாட்டாதவர்கள் எண்ணிக்கையில் மிகப்பலர். இவர்கள் சிந்திப்பதற்குப் பற்றுக்கோடாக விளங்க வேண்டுமென்றே இறைவன், அருளும் நோக்கத்துடன் திருவுருவங்களை இடமாகக் கொண்டு எழுந்தருளி அருள் வழங்குகின்றான். ஒருவுருவ வழிபாடு, வளரும் சமுதாயத்திற்குத் தவிர்க்க இயலாதது; தேவையும் கூட! மக்கட் சமுதாயத்தில் திருவுருவ வழிபாடு தோன்றிய பிறகுதான் திருக்கோயில் நாகரிகம் கால் கொள்கிறது. திருக்கோயில் நாகரிகம் தொடங்கிய காலந்தொட்டு மனிதகுல வாழ்வில் ஒரு புதிய ஆற்றல் மிக்க சமுதாய உணர்வு அரும்புகிறது. திருக்கோயில் ஒரு மாபெரும் சமுதாய இயக்கத்திற்கு மையமாக விளங்குகிறது.

திருக்கோயில் ஏன்?

கடவுள் எங்கும் நிறைந்தவர்; எல்லாப் பொருள்களிடத்தும் தங்கியிருப்பவர்.

“வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்க்
கோனாகி யான்எனதென் றவரவரைக் கூத்தாட்டு
வானாகி நின்றாயை என்சொல்லி வாழ்த்துவனே.”

என்று மாணிக்கவாசகர் கூறுமாறு போலவும்,

“மைப்படிந்த கண்ணாளும் தானும் கச்சி
மயானத்தான் வார்சடையான் என்னி னல்லான்
ஒப்புடைய னல்லன் ஒருவ னல்லன்
ஓரூர னல்லன் ஒருவமன் இவ்வி
அப்படியும் அந்நிறமும் அவ்வண்ணமும்
அவனருளே கண்ணாகக் காணின் அல்லால்
இப்படியன் இந்நிறத்தன் இவ்வண் ணத்தன்
இவனிறைவன் என்றெழுதிக் காட்டொ ணாதே"