பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/459

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பொங்கல் பரிசு

447


ஆயுதந் தாங்கும் இழி நிலையைக் காண்கிறோம். சிறந்த சமயவாதி மறந்தும் கூட மற்றவர்களிடம் காழ்ப்போ, பகையோ கொள்ளமாட்டான்; எவரிடத்தும் அன்பு செலுத்துவதுதான் சிறந்த சமய ஒழுக்கம். வான்மழை பெய்தால் மண்ணில் மரம் செடிகொடிகள் தழைக்கும் என்பது போல, அன்பு மழை பொழிந்தால் மனித சமுதாயம் செழிக்கும்.