பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 12.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ஆலயங்கள் சமுதாய மையங்கள்

45


பெருமான், புலவர்களுக்கிடையேயிருந்த கலகத்தை அடக்கி நக்கீரர், கபிலர், பரணர் ஆகியோர் பாடல்கள் விழுமியவை என்று ஏற்பளித்தார்.

“.......கலை வல்லோர் தமிழ் எல்லாம்
சித்தங்கொடு தெருட்டுஞ்சிறு வணிகன் தெருள்கீரன்
முத்தண்டமிழ் கபிலன்தமிழ் பரணன்தமிழ்மூன்றும்
அத்தன்மையுன் அறியும்தொறும் அறியும்தொறும் எல்லாம்”

“பல்காசொடு கடலிற்படு பவளம்சுடர் தரளம்
எல்லாம் நிறுத்து அளப்பான் என இயல்வாணிகன் குமரன்
சொல்லாழமும் பொருளாழமும் துலை நாவெனத் தூக்க
நல்லாறுஅறி புலவோர்களும் நட்டார்; இகல் விட்டார்”

எனும் திருவிளையாடற்புராணப் பாடலில் இஃதறியலாம். திருக்கோயில் வளாகத்தில் தமிழோடு இசைப் பாடல் ஓதப் பெற்றது; தமிழாய்வு செய்யப்பெற்றது. ஆக, மானிட இயக்கத்தின் ஊற்றாக இருக்கிற சிந்தனை, கருத்து, இலக்கியம், தத்துவம் ஆகிய அனைத்தும் திருக்கோயில் சூழலிலேயே காணப்பெற்றன; படைக்கப்பெற்றன.

திருக்கோயிலைச் சார்ந்து மொழி உலகம் இருந்த வரையில் தமிழ் மொழி தூய்மையாக இருந்தது; கலப்பின்றி இருந்தது; தனித்து இயங்கியது. தமிழ்மொழி வழியதாகச் சமுதாயத்தின் சிந்தனைப் போக்கு அமைந்திருந்தவரையில் உயிர்ப்புள்ளதாக இருந்தது. திருக்கோயிலைத் தமிழ் வளர்த்தது; தமிழைத் திருக்கோயில் வளர்த்தது.

எல்லா உயிர்க்கும் இறையருள்!

மனித வாழ்க்கைக்கு விலங்குகள், பறவைகள் துணை செய்யக் கூடியன. ஆதலால், திருக்கோயில் தத்துவத்தில்