பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

88

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


தமிழினம் தோன்றிய தனிப்பெரும் பிறவி!
பண்டும் அவர்போல் இருந்தவர் இல்லை!
இனியும் அவர்போல் இருப்பவர் ஐயமே!
நெஞ்சிற் பகைகொளாப் பேராளர்அவர்
நயந்தினி துரைக்கும் நாவினர்! பிறரை
உயர்த்திடு வதிலே உவப்படைந் தவர்அவர்!
உயர்த்தியே உயர்ந்த தலைவர்நம் அண்ணா!
கனிவும் கண்டிப்பும் உடைமை அவர்தம்
சிறப்பு! அருமறை உரைத்த நெறிப்படி
பெரியார் சொல்வினை ஏற்று வாழ்ந்தவர்!
சிறந்தார்வாய் இன்னாச் சொல்நோற் றமையால்
துறந்தா ரினும்அவர் துரய்மை யுடையவர்!
குடிசெயல் திறம்மிக வுடையவர் அண்ணா!
அண்ணா விற்கு நன்றி காட்டுதல்
அவர்தம் வழியில் வாழ்தலே யாகும்!
நன்றி கூறி நாம்விடை பெறுகிறோம்!