பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கவியரங்கக் கவிதைகள்

107


காசியைக் கண்ட காசி ஸ்ரீ! நம்
“கவிஞர்கோ” பொற்கிழிக் கவிஞர் அருமை
அரு. சோம சுந்தரம் பெருமைசால் தலைமையில்
கவியரங் கேறிச் செவிநுகர் கனியெனக்
கவிதை பொழிந்திடும் கவிஞர்கள் வாழ்க!
வாழ்க, கோவிலுரர் ஆதீனம் வாழ்க!
வாழ்க, திருவரு ளார்ந்த காசி
விசுவ நாத ஞானதே சிக, நீ
அப்ப ரடிகளின் உழுவலன் பே, என
நின்அன்பு வளர்கென நினைந்து
மகிழ்கின் றனம்யாம்! நன்றி! வாழ்கவே!