124
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
மாண்பார் தமிழக முதல்வர் "டாக்டர்"க்கு
வளனும் நலனும் பெருகிச் சிறக்க,
கண்மணி யன்ன தண்ணருள் சுரக்கும்
அண்ணா மலையார் திருவடி நினைந்து
எழுதும் திருமடல்: இத்திரு நாட்டில்
மக்கள் அனைவரும் ஒருகுலத் தினராய்
வாழ்ந்திடத் தோன்றிய மதத்தின் பெயரால்
சாதியும் நீதியும் பற்பல வளர்ந்தே
சமர்க்களம் ஆக்கலைத் தவிர்த்துக் காத்திட
மனித நேயமே மலர்ந்து மணந்திட,
புதுநெறி புதுமதம் பூத்துச் செழித்திட,
செழுந்தமிழ் நெறியின் செவ்வொளி பரவிட,
தெய்விகப் பேரவை எனும்பெரு நிறுவனத்
தொய்வினை நீக்கித் தொண்டு தொடர்ந்திட
இந்நாள், அதன்பொறுப் பேற்றனம்! அதற்கே
அரசாணை கிடைக்க ஆவன செய்து
பொறுப்பு முழுவதும் ஒப்புவித் துதவி
முழுமையாய் விரைந்து செயல்பட எம்மை
ஈடு படுத்திப் பணிகொள்க என்றே
அன்புடன் வேண்டினோம்! அன்பால்வேண் டினமே!