வாழ்த்தும் இரங்களும்
125
அலைகடல் சூழ்ந்த அழகிய இலங்கை, தீப்
பற்றி எரிகிற தந்தோ! பரிவொடும்
அணைப்பவ ரிலையோ? அந்தச் சந்திரன்
இயலின் கண்டு தெளியும் காலம்
இதுவாம்! உயரிய அறிவியல் இலக்கியம்
கண்(டு)ஓர் உலகம் இன்றுரு வாகி
உள்ளது! ஞாலம் வலம்வரத் தக்கதே
என்னும் உணர்வின் உருவக மேயாம்
எந்தை ஈசன் பிள்ளைகள் இருவரை
ஞாலம் வலம்வர ஏவிய தாகும்!
இன்றைய நிலையில் இனவழிச் சிந்தனை
ஒழுக்கம் எனலும் ஒல்லுமோ? மானுடம்
ஒன்றென் றறிக: ஒரின மென்று
நன்றே யறிக: இலங்கை நாட்டின்
தலைவ! சயவர்த் தன:நின் புகழ்ஒளி
மங்கா திருக்கக் கொல்படைச் செயலை
நிறுத்துக! வேற்று மையில்ஒரு மையே
உயிர்ப்புள ஒருமை என்பதை ஒர்க!
மொழிவழி மாநிலம் முகிழ்த்திடச் செய்க!
நாவலந் தீவென நந்தாப் புகழுடைய
பாரதம் நோக்குக! பாரத நாட்டின்
பண்பட்ட வழியே சட்டம் வகுத்து
இலங்கை அரசியல் எழிலுறப் புதுக்குக!
இனவழிச் சிக்கல் இனிவரா தமையத்
தீர்வுகண் டிடுக! ஈழத் தமிழர்
அரசியல் உரிமை அடைந்திடச் செய்க!
மாவலி யாற்று நீரிலும் தண்ணிய
தகைசால் ஐய! மனிதப் படுகொலை
தவிர்க! இலங்கையின் புகழ்பே னுகவே!