பக்கம்:குன்றக்குடி அடிகளார் நூல்வரிசை 14.pdf/150

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

138

தவத்திரு குன்றக்குடி அடிகளார்


        சம்பந்த தேசிக! நல்லருள் தேசிக!
        சண்முக தேசிக மண்நட மாடும்
        கோயில் களில்எழுந் தருளும் மூர்த்தியாம்
        ஞான புரீசன் எழுந்தருள் கின்ற
        திருக்கோ யிற்பெருஞ் சாந்தித் திருவிழா
        எடுத்தருள் கின்ற எண்ணில்சீர் புண்ணியம்
        எடுத்துக் கூற ஏது நமக்கு
        ஆற்றல்? ஐய, செந்தமிழ்ப் பயனாம்
        சிவநெறி உய்த்துச் செலுத்திய நாயக!
        நின்னருள் தகைமை நினைந்தே என்றன்
        ஆவி கழியும் ஐய! நீ என்னை
        மறக்கப் பெறாமை யானுனை வேண்டுவல்!
        எங்களை யாண்டுகொண் டின்னருள் புரியும்
        ஞான தேசிக சண்முக தேசிக!
        எதுஎமைப் பணிகொளு மாறது அருள்கவே!