இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
164
தவத்திரு குன்றக்குடி அடிகளார்
ஞாலம் ஞா யிற்றை வலம்வரு வதனால்
காலம் நகர்கிறது, ஞாலம் நகர்கிறது
நாடொறும் நானிலத் தினில்எண் ணற்ற
நிகழ்வுகள் நிகழ்ந்த வண்ணம் உள்ளன.
நிகழ்வுகள் நிகழ்ந்தவா றிருப்பன வல்ல.
அந்த நிகழ்வுகள் நந்தம் வாழ்விலும்
தாக்கம் பலப்பல தகவுறச் செய்வதால்
நமது வாழ்விலும் பாதிப் பேற்படும்
அந்தப்பா திப்பை ஆக்கம்நல் குவதாய்
நயந்துஞா லத்தின் நடப்பினுக் கேற்பவும்
கால வர்த்த மானத்திற் கிசையவும்
கலந்தினி தாய்வாழ்ந் திடல்அறி வுடைமை!
உலகத் தோடு ஒட்ட ஒழுகல்
ஒழுக்கம் எனும்உயர் வள்ளுவம் ஒர்க!
வரலாற் றறிவினைச் சார்ந்து வாழ்தலே
அறிவுடை வாழ்வாம்! அமரவாழ் வஃதே!